| பாடுங்குயில் (பாடல்கள்) | 211 |
62 குறிக்கோளை நோக்கி நடந்து செல்கிறேன் நடந்து செல்கிறேன் நலிந்து போயுடல் மெலிந்து தேயினும்
- நடந்து கடந்த பாதையில் நிகழ்ந்த வேதனை கலங்க வைப்பினும் மயங்க வில்லைநான்
- நடந்து அடர்ந்த காடுகள் படர்ந்த மேடுகள் அலைகள் மோதிடும் ஆழ்ந்த ஆறுகள் கொடுங்கண் பார்வையின் விலங்கு மேவினும் கொண்ட என்குறிக் கோளை நோக்கியே - நடந்து இருண்ட கண்ணுடன் இரண்டு கால்களும் சுருண்டு வீழினும் தொடர்ந்து செல்கிறேன் மருண்டு சோர்கிலேன் வெருண்டு தாழ்கிலேன் உருண்டு சென்றுமே உயர்வைக் காணுவேன்
- நடந்து 2.1.1977 |