பக்கம் எண் :

212கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

63
யாழெடுத்து வா

யாழொன்றை எடுத்தோடி வாடி-இன்பம்
யாதென் றுணர்த்தாயோ பாடி?

- யாழ்

வாழ்வென்றும் உனக்கென்றே வாழ்கின்றேன்-வாட்டி
வருத்தாமல் மறுக்காமல் உறைநீக்கி நல்ல?

- யாழ்

புதுமைக்கு வழிகாட்டு புலமைக்கோர் உணர்வூட்டு
பொருள் மிக்க பழம்பாட்டின் புகழுக்கு மெருகேற்று
மதுகைக்கும் படியாக மனத்துக்கு மகிழ்வூட்டு
நலமிக்க இசைமீட்ட நரம்புக்கு முறுக்கேற்று

- யாழ்

5.2.1977