| பாடுங்குயில் (பாடல்கள்) | 213 |
64 கவிதை எழுதிய காகிதம் கவிதை எழுதிய காகிதம் ஆனேன்-அவர் கவிதையைச் சுவைத்ததும் காகிதம் ஆனேன்
- கவிதை புவியோர் போற்றும் புலமையில் உயர்ந்தார் போனவர் இன்னும் ஏன்வர அயர்ந்தார்
- கவிதை கையில் எடுப்பார் கண்வழி படிப்பார் காணும் மகிழ்வால் நெஞ்சது துடிப்பார் செய்ய இதழ்கள் சிறிதுடன் மடிப்பார் செந்தமிழ்ப் பாட்டின் செழுந்தேன் குடிப்பார்
- கவிதை ஒவ்வொரு சொல்லிலும் உளத்தினைக் கொடுப்பார் ஒளிவிடும் அணியின் உயர்வினை வியப்பார் செவ்விய அடிதொடை சீர்எழில் தொடுப்பார் செந்தமிழ்ப் பாட்டின் செழுந்தேன் குடிப்பார்
- கவிதை 3.8.1978 |