பக்கம் எண் :

214கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

65
தப்புத் தாளம்

(மனிதன், வாழ்க்கையைத் தவறாகப் பயன்படுத்துவது
கண்டு பாடியது.)

மனிதன் பெற்றான் ஒரு பாட்டு-பாடி
மகிழ்ந்தான் மனம்போல் தாளமும் போட்டு

- மனிதன்

இனிதென அவனவன் இசைகளும் அமைத்தான்
இதுதான் இசையென விளக்கமும் கொடுத்தான்

- மனிதன்

இசையுடன் பாடலை அவன்வாய் இசைக்கும்
இன்னொரு பண்ணிசை அதனுடன் கலக்கும்
வசையெனச் சொன்னால் அவனதை மறுக்கும்
வளரும் உலகில் புதுமையென் றுரைக்கும்

- மனிதன்

தப்புடன் சொற்பொருள் அறியா துரைக்கும்
தாளமும் சிலசில சமயங்கள் சருக்கும்
எப்படிப் பொறுப்பதென் றுலகமும் வெறுக்கும்
எனினும் தடுத்திட முயலா திருக்கும்

- மனிதன்

18.12.1979