பக்கம் எண் :

216கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

தாய்தந்தை காட்டுகின்ற சீற்றம்-பிள்ளை
தற்காத்துக் கொள்ளத்தான் வேறென்ன மாற்றம்?
நோய்பற்று முன்னேதெ ரிந்து-தாய்
நூறிக்க ரைத்துக்கொ டுப்பாள்ம ருந்து

ஐந்திலே படியாத பிள்ளை-கூட்டில்
அடைத்துக் கிடக்கின்ற பேசாத கிள்ளை
நைந்திருளில் மூழ்குமே வாழ்வு-விடியல்
நாளைக்குத் தோன்றுமோ? ஏனிந்தத் தாழ்வு?

பயிர்செய்யுங் காலத்தில் நட்டால்-நல்ல
பலன்கிட்டும்; என்னாகும் பருவத்தை விட்டால்?
அயராதிப் போதேமு யன்றால்-நன்மை
ஆடிப்பெருக் கெனவே ஓடிவரும் அன்றோ?

31.12.1978


நூறி - அரைத்து