| பாடுங்குயில் (பாடல்கள்) | 219 |
68 கற்பவர் செயலா? கட்டிளங் காளையரே-உம்மைக் கண்டிடும் வேளையிலே மட்டிலா வேதனையால்-உள்ளம் வாடிக் கலங்குகின்றேன் நட்ட நடுத்தெருவில்-நீங்கள் நாலைந்து பேர்கலந்து கட்டுக் கடங்காமல்-நின்று கத்திப் பிதற்றுகின்றீர்! ஏறிய வண்டிகளில்-நீங்கள் ஏழெட்டுப் பேர்நெருங்கிக் கூறும் வரிசையிலே-தோளைக் கோத்துத் திரிந்திடுவீர்! பேருந்தில் ஏறிவிட்டால்-அங்கே பேயாட்டம் ஆடுகின்றீர் ஆரும் வெறுத்திடவே-நீங்கள் ஆர்த்து முழக்குகின்றீர்! நாடக வேடங்கள்போல்-தலையில் நார்முடி காட்டுகின்றீர்! ஆடவர் பெண்டிரெனத்-தோன்றா ஆடையை மாட்டுகின்றீர்! |