22 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
13 தமிழ் - என் தெய்வம் - கோவில் எனது நெஞ்சம் - தனிலே கூடி யருள் புரிவாய் காவியப் பா மாலை - அணிந்தே காத்திட வேண்டு மம்மா நாவின் மிசை யிருப்பாய் - எனக்கு நல்ல மனந் தருவாய் பாவினில் சொல் லிலெல்லாம் - சக்தி பாய்ந்து வர வேண்டும் உன்றன் திருப் பெயரைச் - சொல்லி ஊரினை ஏய்த் திடுவோர் நன்றென வா ழுகின்றார் - நின்றன் நன்மையை நா டுகிலார் துன்றிய பண் பினரும் - உன்பால் தூயநல் லன் பினரும் நின்று வருந் திடவே - செய்தல் நீதியின் பாற் படுமோ? நெஞ்சில் உனை நினைந்தே - என்றும் நேர்மையில் நிற் பவரை மிஞ்சும் வறு மையினால் - துன்பம் மேலிடச் செய் துநின்றாய் வஞ்சனை செய் மனிதர் - அவர்க்கு வாழ்வுகள் தந் துநின்றாய் வஞ்சியுன் சோ தனையோ? - எங்கள் வாழ்வெலாம் வே தனையோ? |