பக்கம் எண் :

காவியப் பாவை23

நித்தம் உனைத் தொழுதே - எங்கும்
    நின்புகழ் பா டுமெனைப்
பித்தன் வெறி யனென்றே - உலகம்
    பேசுதல் காண் கிலையோ?
முத்தமிழ் தந் தபித்தால் - செல்வம்
    முன்னின்று தே டுகிலேன்
இத்தரை மீ தினிலே - வறுமை
    எத்தனை துன் பமம்மா!

கொல்லும் வறு மையிலும் - செம்மை
    குன்றா திலங் கிடவே
வெல்லும் மன நிலையைத் - தாயே
    வேண்டுகி றேன் அருள்வாய்
சொல்லுமென் பா டலினால் - உலகம்
    சூழ்ந்து வணங் கிடவே
வல்லமை வேண் டுமம்மா - என்றும்நான்
    வாழ்ந்திட வேண் டுமம்மா.