பக்கம் எண் :

24கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

14
தமிழ் - என் தாய்
-

செந்தமிழ் என் பவளாம் - நல்ல
    செல்வக் குடி மகளாம்
முந்தை மொழிகளிலே - அவளும்
    மூத்தவ ளாய்ப் பிறந்தாள்
முந்திய மூ வரசர் - அவையில்
    மொய்ம்புறத் தான் வளர்ந்தாள்
வந்தவர் யா வருக்கும் - செல்வம்
    வாரி வழங் கிடுவாள்

தென்ற லுடன் பிறந்தாள் - நல்ல
    செய்கையொன் றே யறிவாள்
என்று பிறந் தவளோ? - இவள்
    எத்தனை ஆண் டினளோ?
இன்றும் இள மையுடன் - அன்னை
    ஏற்றம் உறப் பொலிவாள்
ஒன்றிய நான்கு பெண்கள் - பெற்ற
    ஒண்டொடி யா மவளே

கன்னடத் தான் துளுவன் - மலையன்
    கண்டு மொழித் தெலுங்கன்
என்னுமிந் நால் வருக்கும் - அவரை
    ஈந்து மணம் முடித்தாள்
பெண்ணெடுத் தே மகிழ்ந்தோர் - என்னைப்
    பெற்றவ ளைப் பகைத்தார்
நன்னடைப் போக் கிழந்தார் - அந்த
    நால்வரும் நன் றிகொன்றார்