ஈன்றெனைக் காத் தவளை - மனமே எங்ஙனம் நான் புகழ்வேன் சான்றவர் மெச் சிடவே - முப்பால் தந்து வளர்த் தனள்தாய் தோன்றுசங் கப் புலவர் - படைத்த தொட்டிலில் ஆட் டினவள் மூன்றர சர் கதைகள் - சொல்லி மூள்வலி யூட் டினள்தாய் என்றன் வய துநிலை - பருவம் ஏற்பவை தான் உணர்ந்தே நன்றறி வுக் கதைகள் - நகை நாட்டும் பிற கதைகள் ஒன்றிய வீ ரமுடன் - காதல் ஊட்டுஞ் சுவைக் கதைகள் மின்றளிர் மே னியினாள் - சொல்லி மேன்மை யுறப் பணித்தாள் மேவுக தொண் டுளமே - என்பாள் மேகலைக் கா தையினால் பாவுக நீ தியென்பாள் - எங்கள் பாண்டியன் கா தையினால் கோவுயர் குட் டுவனால் - வீரங் கொட்டி முழக் கிடுவாள் பாவில் நகைச் சுவையாத் - தருவள் பாண்டவர் காதையினால் வாழ வழி வகுத்த - திரு வள்ளுவன் ரா மலிங்கம் ஆழ நெடும் புலமைக் - கம்பன் அவ்வை யுட னிளங்கோ சோழரில் பாண் டியரில் - கவி சொன்னவர் சீத் தலையான் தோழர்கள் என் றிவர்போல் - பலரைத் தொல்புகழ்த் தாய் கொடுத்தாள் |