பக்கம் எண் :

222கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

சோம்பலை ஏய்த்தலை நீக்கிடுவோம்-கெட்ட
    சூழ்ச்சிகள் வஞ்சனை போக்கிடுவோம்
கூம்பிய தோள்களை ஏற்றிடுவோம்-நாளும்
    கூடும் உழைப்பினை யாக்கிடுவோம்

வாய்ப்பறை சாற்றலைத் தைத்திடுவோம்-நெஞ்சில்
    வாய்மையை நேர்மையை வைத்திடுவோம்
ஏய்ப்பதை நாமினி நைத் தெறிவோம்-பொய்யை
    ஏறி மிதித்ததைப் பிய்த்தெறிவோம்

வேதங்கள் பூதங்கள் என்றுரைத்தால்-அந்த
    வீணரின் கொள்கையைக் கொன் றழிப்போம்
வாதங்கள் மேடையில் நின்றுரைப்போம்-சொன்ன
    வாய்மைகள் யாவையும் நன்றமைப்போம்.

20.2.1979