பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)223

70
எனது உலகம்

எனக்கென உண்டொரு வுலகம்-அங்கே
    இன்பங்கள் வந்தெனைத் தழுவும்
மனத்தினில் தானது குலவும்-வந்த
    வாட்டங்கள் விட்டெனை விலகும்

பலப்பல புதுமைகள் நிகழும்-நல்ல
    பாடல்கள் பற்பல திகழும்
சொலச்சொல மனமது மகிழும்- அந்தச்
    சுவையினில் நாவது புகழும்

மிதப்பது போலொரு கனவு-காதல்
    மெல்லிய மாதரின் உறவு
புதுப்புது நினைவுகள் வரவு-நெஞ்சப்
    பூவினில் சுவைமிகு நறவு.

இனித்திடும் அவ்வுல கதனில்-என்னை
    எதிர்த்திட ஒருபகை யிலேயே
கனிச்சுவை யனையஎன் மொழியைக்-கேட்டுக்
    கருத்துடன் தொடர்வரென் வழியை

நிமிர்த்திய தோளோடு வருவேன்-அங்கு
    நின்றிடு வார்க்குரை தருவேன்
அமைச்சர்கள் வாழ்த்திட மகிழ்வேன்-என்றன்
    அரியணை மீதினில் அமர்வேன்