224 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கொடுமைகள் பொடிபடச் சிதறும்-என்வாய் கோளரி யோவென அதிரும் மிடிமைகள் இலையென உதிரும்-வஞ்சம் மேவிய சூழ்ச்சிகள் கதறும் மடம்படு சாதிகள் தொலையும்-அங்கு மதமெனும் போர்வைகள் கலையும் கடவுளின் கதைகளும் விலகும்-செம்மைக் கதிரவன் ஒளிதரப் பொலியும் இலக்கண நெறியொடு திகழும் இன்ப இலக்கிய வாழ்வினில் மகிழும் நிலத்தினில் உயர்வெனப் புகழும்-நல்ல நீதிகள் தழுவுமென் னுலகம். 25.2.1979 |