| பாடுங்குயில் (பாடல்கள்) | 225 |
71 உலகம் சிரித்தது நேர்மை யோடு வாழ்க வென்று நீதி நூல்கள் பாடின ஆர்வ மோடு நெஞ்சில் நாளும் அந்த வாழ்வை நாடினேன் ஏட்டுப் பூச்சி என்று பேசி என்னை உலகம் சிரித்தது வாயில் ஒன்றும் நெஞ்சில் ஒன்றும் வைத்துப் பேசக் கூசினேன் சேயின் வாழ்வு சாயும் போதும் செம்மை ஒன்றே பேசினேன் பித்தன் பித்தன் என்று கேலி பேசி உலகம் சிரித்தது நாட்டு வாழ்வை நச்சி நின்று நாளும் நெஞ்சில் நாடினேன் வீட்டு வாழ்வில் நாட்டமின்றி வீறு கொண்டு பாடினேன் நாட்டுப் போக்கைச் சுட்டிக் காடடி நாளும் உலகம் சிரித்தது |