228 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கோலத் தமிழ்மொழி உயர்ந்திட-நெஞ்சம் கூவிக் குரல்தரும் வளர்ந்திட ஞாலத் தொருபகை எழுந்திடின்-அப்பகை நாணிப் புறமிட முழங்கிடும் வாழத் தரையினில் பிறந்தவர்-அந்தோ வாடிப் புழுவென வதங்கினர் நாளை அவர்துயர் தொலைந்திடப்-பாடல் நாளும் கணைகளை வழங்கிடும் நாட்டின் தொழிலிடை முனைந்தவர்- வாழ நாளும் உழவுகள் புரிந்தவர் வாட்டும் வறுமையில் உழன்றனர்-மீள வாளென என்கவி சுழன்றிடும் 23.6.1979 |