| பாடுங்குயில் (பாடல்கள்) | 229 |
73 நாளைய நாடு அதோ அதோ ஒரு நாடு - கண்ணின் அருகில் தெரிவதை நீ பாடு.
- அதோ எத்தனை எத்தனைக் கலைகள்-அவை அத்தனை யுந்தமிழ் மொழியில் இத்தரை மீதினில் உலவும்- கலை எத்தனை அத்தனை நிலவும் - அதோ கற்றிட வந்தனர் கலையே-வெறும் கத்தலும் கூச்சலும் இலையே கற்றவிஞ் ஞானியின் அலைகள்-நாடு காத்திடும் நினைவுடன் உலவும்
- அதோ புத்தம் புதுத்தொழில் உயரும்-அவை பூத்துக் குலுங்கிட வளரும் எத்திசை நோக்கினும் கதவம்-அங்கே எப்பொழு துந்திறந் தொளிரும்
- அதோ நாளும் உழைப்புகள் பெருகும்-கொடும் நச்சுச் சுரண்டலும் கருகும் பாழும் அடைப்புகள் கடியும்-மிடி பற்றிய வெந்துயர் மடியும்
|