232 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
மாலையில் நாணிச் சிவந்திட வருவாள் மருளும் மாலையை மயங்கிடத் தருவாள் சீலையென் றிரவினைத் தாங்கியே திரிவாள் சிரித்திடச் சிரித்திட விந்தைகள் புரிவாள்
- அவளும் செடிகொடி விரிக்கும் மலர்களிற் சிரிப்பாள் சிதறிய மலர்களில் பஞ்சணை விரிப்பாள் மிடிகெட உழைக்கும் தோள்களில் இருப்பாள் மேதினி யாவும் மேம்படும் விருப்பாள்
- அவளும் உழுபவள் கலப்பையின் முனைதனில் நடப்பாள் உளிகொளும் சிற்பியின் விரல்களில் நடிப்பாள் *இழைகொளும் பாவினில் அவிநயம் பிடிப்பாள் எழுச்சிகொள் கவிஞனுக் குணர்ச்சியைக் கொடுப்பாள்
- அவளும் 24.6.1979
* நெய்யுந்தறி |