பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)237

78
மணல் வீடு

வீசும் அலைகடல் ஒரம்-மாலை
    வெய்யில் குறைகின்ற நேரம்
பேசுங் கவிமக ளோடு-நெஞ்சம்
    பின்னிக் கிடந்தன போடு

சின்னஞ் சிறுமியர் கூடி-அங்குச்
    செய்தனர் ஓர்மணல் வீடு
தின்னுங் கறியுடன் சாறு - கூட்டு
    செய்து வடித்தனர் சோறு

வட்டமிட் டொன்றியி ருந்தே-உண்டனர்
    வாரிப் படைத்தும கிழ்ந்தே
எட்டியிருந்துண வுண்ணும்-கெட்ட
    எண்ணமங் கெப்படி நண்ணும்?

மாவிலை தோரணம் உண்டு-நல்ல
    மாப்பிளை பெண்களும் உண்டு
கூவினர் ஆர்த்தனர் கண்டு-மேளம்
    கொட்டினர் வாயொலி விண்டு

எப்படி யோஅவ ரண்டை-சட்டென்
    றேற்பட்ட தேஒரு சண்டை
அப்படி யேமணல் வீடு-தூள்தூள்
    ஆகிய தேசிறு மேடு