32 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
ஊடிப் புலந் துநின்றாய் - என்றன் உள்ளம் அறிந் திலையோ? நாடித் திரி பவனோ - வஞ்சக நங்கையின் கா தலுக்கே மேலைத் திசை யுடையாள் - ஒருத்தி மேன்மைக் குண முடையாள் வாலைக் கும ரியுடன் - நண்பாய் வாய்மொழி பே சிடுவேன் நெஞ்சிற் கெடு தியில்லை - அவளால் நேர்வது நன் மையடி வஞ்சிக் கொடி யிடையே புலவி வாட்டந் தவிர்ந் திடடி நெஞ்சத் தடந் தனில்நீ - உலவும் நீள்சிறை அன் னமடி வஞ்சனை இல் லையடி - நீயே வாழ்க்கைத் துணை வியடி பேதை மனக் குயிலே - உன்னைப் பெற்றவள் இல் லையடி ஏதுக் கடி புலவி - தமிழே என்னைவிட் டெங் ககல்வாய்? காலில் சிலம் பொலிக்க - வருவாய் காதல் மது பருகிக் கோலப் பெரு வெளியில் - கவி வெறி கொண்டு திரி வமடி சோலை வெளியிடையே - நாம் சுற்றித் திரி வமடி மாலை நிலா வரவே - தனியாய் மாடந் தனை யடைவோம் அங்குநம் கூட்டுறவால் - பிறந்த அன்புக் குழந் தைகளை சங்கக் கவிதை என்றே - உலகம் சாற்றிப் புக ழுமடி
இப்பாடல் இந்திய தேசியப் புத்தகக் குழுவினரால் (National Book Trust, India) ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |