34 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கெட்ட மொழியினைப் பேசுவது - மிகக் கேடு தருஞ்செயல் விட்டுவிடு சிட்டு நிகர்த்திடும் என்மகனே - வரும் சின்ன மொழியையும் தள்ளிவிடு சாதி சமயங்கள் என்பவரை - நண்பிற் சார்ந்து பழகுதல் தீமையடா ஓதிய சங்கத்தில் உள்ளவரே - நம்மை ஓம்பி வளர்த்திடும் நல்லவராம் உன்னைச் சிறியவர் ஏசுகையில் - பெற்ற உள்ளம் கொதிப்பதை யாரறிவார்? முன்னைப் பெருமைகள் அத்தனையும் கொண்டு முன்னேறிச் செல்லுதல் வேண்டுமடா முற்றவும் உன்திறம் ஆய்ந்துணர்ந்தே - இன்பம் மூழ்கித் திளைப்பவ ளாயிடினும் பெற்ற பொழுதினும் நான்மகிழ்ந்தேன் - பிறர் பேசிப் புகழ்ந்துனைப் போற்றுகையில் வந்தவள் காதலில் சிக்கியதால் - தந்தை வாழ்வில் மனங்கொளும் பான்மையின்றி நொந்திடச் செய்தனர் ஆயினுமே - நன்னூல் நூற்று வளர்த்திடு வேன்உனையே நின்னைப் பெறுவதற் கென்னதவம் - செய்தேன் நேரினில் உன்னடை கண்டவர்கள் என்னைஓர் தக்கவள் என்றுரைத்தார் - புகழ் ஏற்றிட வந்தனை வாழியவே |