பக்கம் எண் :

காவியப் பாவை37

21

தமிழகம் தாழ்ந்ததேன்?

-
எடுப்பு

தமிழகமே-நம்நாடு
தாழ்நிலை எய்திய தெதனாலோ?

-தமிழகமே

தொடுப்பு

அமிழ்தெனும் தமிழ்மொழி காத்தனர் வேந்தர்
அருஞ்செயல் புரிந்தனர் வாழ்ந்தனர் மாந்தர்

-தமிழகமே

முடிப்பு

முரசொலி கேட்டால் மூண்டெழுவார்-போரில்
முதுகிடப் புறப்பகை கண்டிடுவார்
அரசரும் புலவரும் இணைந்திருந்தார்-இங்கே
அகப்பகை எவ்விதம் புகுந்ததுவோ?

-தமிழகமே

தென்றல் தவழ்ந்திடும் தமிழகமே-இன்று
தேய்ந்திடக் கண்டிரோம் என்றெழுந்தார்
நன்றிது செய்தனர் எனமகிழ்ந்தோம்-ஆனால்
நாய்க்குணம் புகுந்தது பாசறையில்!

-தமிழகமே

விடுதலை என்றொரு சொல்கேட்டோம்-நாட்டில்
வீரமும் மானமும் உண்டென்றோம்
கெடுதலைப் புரிந்திடும் வினையார் - நாடு
கீழ்நிலை எய்திடச் செய்கின்றார்

-தமிழகமே