பக்கம் எண் :

காவியப் பாவை41

ஆழ்கடற் சாவகம் புட்பகம் சீனமும்
    ஆதி யவனம் கடாரமுடன்
ஈழம் முதலன தேயமெ லாமிவர்
    ஏகினர் தோணியில் வீரமுடன்

இவ்வகை வாழ்ந்தனர் என்னின மாந்தர்கள்
    என்றதும் என்னுளம் பொங்கியதே
அவ்வியல் தேய்ந்தனர் இன்றவர் என்றதும்
    ஆவென் றுயிர்த்துளம் மங்கியதே