46 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
29 இனிப் பொறுக்க முடியாது - எடுப்பு இன்னும் பொறுத்திருக்க இயலாது - சும்மா இருக்கின்றீர் மணங்கொள்ள முயலாது -இன்னும் தொடுப்பு கன்னமெல்லாம் சிவந்த காரணம் யாதென்று கடிந்துரைத்தாள் அன்னை கலங்க வைத்தாள் என்னை -இன்னும் முடிப்பு சோறுண்ண மறுத்தால் சூதென்ன சொல்லென்பாள் தூங்குதூங் கென்று வாங்கிடுவாள் உயிரை வேறென்ன செய்தாலும் விளையாட மறுத்தாலும் வியப்பாள் தந்தையொடு கலப்பாள் முறைப்பாள் -இன்னும் உடல்வேறு பாடுகளை உன்னித்து நோக்குகிறாள் உறவுமுறை யிலொரு மாப்பிள்ளை தேடுகிறாள் மடல்சேரும் தாழைமரச் சோலைக்கு வாருங்கள் மணம்வைக்கும் நாள்தன்னை மாதென்பால் கூறுங்கள் -இன்னும் |