30 நாணம் ஏனோ? - எடுப்பு கதவில் உடல்மறைத்துக் காட்டுகிறாள் முகத்தை-எனைக் கண்டவுடன் நாணம் கொண்டமையினாலோ? -கதவில் தொடுப்பு விதவிதமாம் மலர்சூடி மேலாடை சூடாமல் விளையாடித் திரிந்தாளே அதை எல்லாம் மறந்தாளோ? -கதவில் விளையாடும் ஒருநாளில் வீண்வம்பு நான்செய்தேன் வெம்பிஅழு தெனைவைதாள் நான் வளையை நொறுக்கியபின் தலைநோகக் கொட்டியதை நினையாமல் மறுநாளும் தானாக விளையாட வந்துதையும் மறந்தாளோ? -கதவில் குடங்கொண்டு நீரோடு வருங்காலை இப்போது குனிந்ததலை நிமிராமல் நடந்துபிறர் அறியாமல் தடங்கண்ணி ஏகிடுவாள் தனியான நிலைகாணின் தானோக்கி நகைசெய்வாள் மானோக்கி மனம்யாதோ? -கதவில் |