32 இன்னும் வரக்காணேன்! - எடுப்பு இந்நேரமாகியும் காணேனே - காலையில் எழுந்திருந்து சென்றவர்-இந்நேரம் தொடுப்பு தென்னைமர நிழல்வந்து தெருவாயிற் படிஓரம் சேர்ந்ததே! ஒன்பது மணிச்சங்கும் ஓய்ந்ததே -இந்நேரம் முடிப்பு எக்காலும் ஆர்வமாய் உண்பார் என்றெண்ணி என்நாதன் மனம்மகிழ எழுந்தோடி நான்செய்த சிக்கான நூல்போன்ற இடியப்பம் வீணாகச் சில்லிட்டுப் போகுதே! நெஞ்சமும் நோகுதே! -இந்நேரம் வரும்வழியில் எவரேனும் வாய்கிளறி விட்டாரோ வம்பெதற்கோ அரசாங்கப் பேச்சைத்தான் தொட்டாரோ? தரும்சுவையில் மேலான தமிழென்றால் உயிராச்சே! தாய்மொழியின் நிலையத்தான் உரையாடி நின்றாரோ? -இந்நேரம் |