பக்கம் எண் :

50கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

33
எந்தவிதம் மறந்தார்?

-
எடுப்பு

எந்தவிதம் மறந்தாரோ - என்னை
நொந்து மெலிந்திடவே பிரிந்தாரே

-எந்த

தொடுப்பு

வந்திடுவேன் மழைக் காலத்திலே என்றார்
வாராமலே இன்னும் வாட்டியே கொன்றார்

-எந்த

முடிப்பு

வாட்டமுகங் கண்டால் நெஞ்சம் நெகிழ்ந்திடக்கெஞ்சுவார்
வம்புகள் செய்துபின் வாரியணைத்தெனைக் கொஞ்சுவார்
சேட்டைமொழிபேசி முத்தங் கொடுத்தெனைக் கூடுவார்
செப்பமான தமிழ்ப்பாடல் மகிழ்ந்திடப் பாடுவார்

-எந்த