52 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
35 வருவாரோ? வாராரோ? - எடுப்பு வருவாரோ வாராரோ மணவாளன் தைநாளில் -வருவாரோ தொடுப்பு உறவாடி ஒருகன்னம் சிவப்பேறச் செய்தார் ஒசிந்தோடி நாணினேன் மறுகன்னம் புதைத்தார் -வருவாரோ முடிப்பு பொருள்சேரும் தமிழ்ப்பாடல் பாடுவேன் புதிதான முறையாலே ஆடுவேன் மருள்மாலை வருவார் நான் ஊடுவேன் மகிழ்வாக்கித் தருவார்பின் கூடுவேன் -வருவாரோ சொன்னசொல் அத்தனையும் மறப்பாரோ சுடுநிலவில் துயருண்டு கிடப்பேனோ என்னினைவு இல்லாமல் இருப்பாரோ எத்தனைநாள் இத்துயரம் பொறுப்பேனோ -வருவாரோ |