பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

35
வருவாரோ? வாராரோ?

-
எடுப்பு

வருவாரோ வாராரோ
மணவாளன் தைநாளில்

-வருவாரோ

தொடுப்பு

உறவாடி ஒருகன்னம் சிவப்பேறச் செய்தார்
ஒசிந்தோடி நாணினேன் மறுகன்னம் புதைத்தார்

-வருவாரோ

முடிப்பு

பொருள்சேரும் தமிழ்ப்பாடல் பாடுவேன்
புதிதான முறையாலே ஆடுவேன்
மருள்மாலை வருவார் நான் ஊடுவேன்
மகிழ்வாக்கித் தருவார்பின் கூடுவேன்

-வருவாரோ

சொன்னசொல் அத்தனையும் மறப்பாரோ
சுடுநிலவில் துயருண்டு கிடப்பேனோ
என்னினைவு இல்லாமல் இருப்பாரோ
எத்தனைநாள் இத்துயரம் பொறுப்பேனோ

-வருவாரோ