பக்கம் எண் :

காவியப் பாவை55

செவிலி :

சூதறி யாதவள் வாதறி யாதவள்
சொக்கி நடந்தனள் மங்கையே - இதில்
யாது நடந்தது தங்கையே - முகம்
ஏக்கம் படர்ந்ததேன் நங்கையே

தோழி :

காதல் மலர்ந்தது நாணம் பிறந்தது
கண்டு தெளிந்தனள் யாவுமே - துயர்
மாது முகந்தனில் மேவுமே - அவன்
மாலை அணிந்தபின் போகுமே