பக்கம் எண் :

காவியப் பாவை59

40
விளையும் பயிர்
-

தலைவன்:

கொடிதூவும் மலர்யாவும்
    அணை யாகுமோ - தென்றல்
குளிர்பூசி மணம்வீசித்
    துணை யாகுமோ - நமக்குப்
புணை யாகுமோ

தலைவி:

மயிலாடக் குயில்பாடும்
    வனம் யாவுமே - காதல்
மகிழ்வோடு விளையாடும்
    இட மாகுமே - நமக்குப்
பட காகுமே

தலைவன்:

நிலமீதில் உயர்வானின்
    நலஞ் சேருமோ - காதற்
கலையாவும் நிலையாகி
    நன வாகுமோ - அன்றிக்
கன வாகுமோ