பக்கம் எண் :

காவியப் பாவை61

41
கூடித் திரிவோம்
-

நெற்றிப் பிறை தனிலே - புரளும்
    நீள்சுருள் கூந்தலடி
முற்றத் துறந் தவரைக் - காதல்
    மோகத்தில் ஆழ்த்துமடி

பேச்சுக் குறும் பதனால் - என்னைப்
    பேதுறச் செய்துவிட்டாய்
வீச்சு விழி களினால் - எனக்கு
    வேதனை தந்து விட்டாய்

கச்சுக் குடங் களினால் - எனக்குக்
    கள்வெறி மூண்டதடி
நச்சுப் படம் விரித்தாய் - நெஞ்சம்
    நைந்திட நீசிரித்தாய்

சின்னக் குறு நகைதான் - உன்றன்
    செவ்விதழ் ஓரத்திலே
மின்னப் பொழிந் திடுவாய் - என்னுயிர்
    மீண்டும் தளிர்த்திடவே

வெண்கலத் தண் குரலோ - உனக்கு
    வீணை நரம்பொலியோ
பண்கலந் தே இசைத்தால் - இன்பப்
    பாற்கடல் மூழ்கிடுவேன்

பாடிக் களித் திடுவோம் - இன்பப்
    பாலிற் குளித்திடுவோம்
கூடித் திரிந் திடுவோம் - வானக்
    கோல வெளிதனிலே