62 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
42 வீணை மீட்டுவோம் - தலைவன் : வானத்திலே கோட்டைகட்டித், தோட்டம் படைத்தேன் - அங்கே வாசமலர் பூத்திருக்க வாழ்வு கொடுத்தேன் தேன்குடிக்கும் நாளைஎண்ணிச் சிந்தை மகிழ்ந்தேன் - அந்தத் தெய்வமலர் வாடியதால் தேய்ந்து சிதைந்தேன் தலைவி: காய்ந்தமலர் வீழ்ந்துவிட்டால் காலம் மாறுமே - அந்தக் காலத்திலே வேறுமலர் பூத்துக் காணுமே பூத்தமலர் வாழ்வுதனில் புதுமை காட்டுமே - அந்தப் புதுமைஎலாம் நாளுமின்பப் போதை யூட்டுமே |