தலைவன்: வாடுமென்றன் வாழ்விலின்பம் வந்து கூடுமோ? - காதல் வாஞ்சையினால் மீண்டும்மன வண்டு பாடுமோ? தலைவி : நாடிவரும் வீணையிலே நாதம் இல்லையா? - அந்த நாதந்தரும் பாடலிலே நாட்ட மில்லையா? இருவரும்: வீணையினை நாமெடுத்தே மீட்டி வருவோம் - காதல் விந்தைஎலாம் கண்டுலகில் மேன்மை பெறுவோம்
காதலில் தோல்வி கண்ட ஒருவனும் அவன்பாற் காதல் கொண்ட மற்றொருத்தியும் பாடுவது. |