64 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
43 ஆற்றங்கரைக் காதலி - ஆற்றங் கரையினிலே - ஒரு நாள் ஆடி அமர்ந்திருந்தேன் நாற்ற மலர்வீச - நடந்து நங்கை ஒருத்திவந்தாள் கூற்று நிகர்கண்ணால் - என்னையே கொல்வது போல்நடந்தாள் காற்றெனப் பின்தொடர்ந்தேன் - மெல்லிய கைம்மலர் பற்றிவிட்டேன் சட்டென நின்றுவிட்டாள் - மார்பில் சாய்த்துக்கொண் டங்குநின்றேன் விட்டு விடும்என்றாள் - உயிரை விட்டிட நான்விரும்பேன் கட்டிய பெண்போல - என்பால் காதல் மொழிசொன்னீர் மட்டிலா அன்புகொண்டால் - மனத்தை மாற்ற லரிதென்றாள் மந்திர மில்லாமல் - ஓதும் மறையவர் இல்லாமல் சந்தன மில்லாமல் - தாலிச் சரடுமே இல்லாமல் அந்தஇடம் மணந்தோம் - சான்றும் அகமன்றி வேறில்லை தொந்திர வில்லாமல் - நாங்கள் துணைவர்களாகி விட்டோம் |