66 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
44 ஆடுவோம் பாடுவோம் - கொஞ்சு மொழிபேசும் மங்கையரே இங்குக் கூடி மகிழ்ந்துநாம் ஆடிடுவோம் - இனிப் பஞ்சமெ லாமொழிந் தின்பமே பொங்கிடப் பாற்பொங்கல் பற்றியே பாடிடுவோம் சர்க்கரைப் பொங்கலும் வெண்ணிறப் பொங்கலும் சாற்றுக் கரும்புடன் சேர்த்துவைத்து - வாழை நற்கனி பற்பல உண்டு மகிழ்ந்திட நாம்படைப் போமடி காதலர்க்கு பாளை விரித்திடும் தென்னைம ரக்காவின் பக்கத்திலே மக்கள் கூட்டத்திலே - நாளை காளை தழுவிடும் காதலர் வீரத்தைக் கண்டு மகிழ்ந்துநாம் பாடிடுவோம் அண்ணன்மார் தம்பிமார் ஐயாவும் சேர்ந்துண்ண ஆக்கிப் படைக்கின்றோம் அன்புப்பொங்கல் - உண்டு பண்ணிசைப் பாரவர் பாட்டினுக் கேற்பவே பாவைய ரேமகிழ்ந் தாடிடுவோம் வீட்டுக்குள் ளேதிரு நாட்டுக்குள் ளேபகை ஓட்டிடுவோம் அன்பு காட்டிடுவோம் - இதைக் கேட்டு மகிழ்ந்திட வந்தது தைப்பொங்கல் கேடுகள் நீங்கிடப் பாடிடுவோம் வாழ்க தமிழினம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வான்மழையே - எங்கும் வாழ்க மகிழ்வன்பு வாழிய நானிலம் வாழ்த்துவம் வாழ்த்துவம் மங்கையரே! |