பக்கம் எண் :

72கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

48
பிள்ளைக் குறும்பு

-
எடுப்பு

சொன்னாலும் புரியாத பருவம் - என்றன்
துயரத்தைச் சற்றேனும் உணராத சிறுவன்

-சொன்னாலும்

முடிப்பு

காலைச் சுடர்தோன்றும் முன்னே - தூக்கம்
கலையாமல் கண்விழித் தழுவானென் கண்ணே
பாலைக் கொடுத்தான பின்னே - அந்தப்
பாலன் குறும்புக்கோர் அளவுண்டோ பெண்ணே

-சொன்னாலும்

வாயிலில் மாக்கோலம் போட்டுப் - பின்னர்
வந்தங்கு நோக்குவேன் அவன்கூச்சல் கேட்டுக்
கோயிலில் பிள்ளையார் போலே - அந்தக்
கோலப் பொடிக்குள்ளே மூழ்கித் தவிப்பான்

-சொன்னாலும்

சோறாக்க விடுவானோ பிள்ளை - அப்பப்ப
சொல்லமுடி யாதபடி தருவானே தொல்லை
கூறாக்கி வைப்பானே யாவும் - சமையற்
கூடமவன் பயில்கின்ற போர்க்கூட மாகும்

-சொன்னாலும்