74 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
49 நிலையாய் இரு - எடுப்பு கொள்கையில் நிலையாயிரு மனிதா - கொண்ட கொள்கையில் நிலையாயிரு மனிதா - எந்தக் கொடுமைகள் வந்தாலும் கலையாதிரு மனிதா -கொள்கை தொடுப்பு கொள்ளைநிதி பலவாக உனைநாடிக் குவிந்தாலும் கொடுவறுமை மிகவாகித் துயராலே அவிந்தாலும் -கொள்கை முடிப்பு சரியா இது தவறா என அறிவால்மிக நினைவாய் தகுமேஇது எனஓர்நெறி விழைவாய் அதில் புகுவாய் உரமேபெறு பயமேதொலை இறவாதவர் இலையே ஒருசாண்வயி றுணவேபெற நிலைமாறுதல் புலையே -கொள்கை |