50 புண்படுமா? - மாணவச் செல்வங்களே - நும்பால் மாசுகள் நேர்கையிலே நாணிடப் பேசிடுவான் - உங்கள் நன்மையை நாடிடுவான் குற்றம் புரிந்துவிடின் - உங்கள் கொள்கை திரிந்துவிடின் சற்றும் தயங்கலிலான் - வன்சொல் சாற்றிட முன்வருவான் புண்படும் உங்கள் மனம் - என்று பூட்டிய வாயினனாய்க் கண்படை கொள்ளுவனேல் - ஆசான் கல்வியைக் காப்பவனோ? நோயினைத் தீர்ப்பதற்கே - கற்ற நூலின் மருத்துவன்பால் போயுடல் காட்டிடுங்கால் - அப்பிணி போக்குதற் கீவதென்ன? வெல்லமும் சர்க்கரையும் - தந்தால் வேதனை தீர்ந்திடுமோ? சொல்லவுங் கைக்குதம்மா - அந்தச் சூரண மாத்திரைகள்! |