76 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கையினிற் சீழிருந்தால் - நல்ல கத்தியி னாலறுப்பான் மெய்யினில் புண்படுமே - என்றால் மேனி நலம்பெறுமோ? சாதிச் சழக்குகளும்-பொய்மைச் சாத்திரக் குப்பைகளும் மோதிப் பகைக்குணத்தால் - சண்டை மூண்டு மலிந்ததுவே மூட மதிச்செயலால் - மாந்தர் மொய்ம்பு சிதைந்தனரே! நாடு நலிந்ததுவே - மன்பதை நாற்றம் மிகுந்ததுவே! இச்சமு தாயமதை - மாற்றி ஏற்றங் கொடுப்பதென்றால் எச்செயல் ஏற்றதுவோ - நன்றே எண்ணித் துணிந்திடுவீர்! உற்ற புரட்சியினால் - அன்றி ஓர்நலம் கூடிடுமோ? மற்றவர் புண்படுவார் - என்றால் மன்பதை சீர்பெறுமோ? |