86 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
57 இன்பத்தின் நிழல் - நல்லதோர் யாழினை பெற்றுவந்தேன் - அதை நானெடுத் தேஇசை மீட்டிநின்றேன் மெல்லிசை என்செவி பாய்கையிலே - அதில் மேவிய ஓர்நரம் பற்றதடா! செந்தமிழ்க் காவியம் செய்துவைத்தேன் - அதில் சிந்தனை யாவையும் பெய்து வைத்தேன் வந்தது வாழ்வென நம்பிநின்றேன் - அது மண்ணிற் புதைந்து சிதைந்ததடா! பச்சைப் பசுங்கிளி பாய்ந்துவந்தே - என்பால் பாச முடன்மொழி பேசியதே இச்சைஎலாம் அதில் வைத்திருந்தேன் - மனம் ஏங்கிடப் பூனையும் கவ்வியதே! கண்கவர் சிற்பமொன் றாக்கிவைத்தேன் - அதில் கற்பனை யாவையும் தேக்கிவைத்தேன் புண்பட என்மனம் ஆனதடா - அந்தப் பொற்சிலை பாழ்பட்டுப் போனதடா! புத்துலகம் ஒன்று நான்படைத்தேன் - அதில் பொன்னிற மாளிகை கட்டிவைத்தேன் பித்தனைப் போல்மனம் பேதுறவே - அதில் பேரிடி ஒன்று விழுந்ததடா!
கவிஞரின் ஐயாட்டைப் பருவத்து ஆண்மகன் இயற்கை எய்தியபொழுது மனம் வெம்பிப் பாடியது - 1959 |