58 இரண்டும் உண்டு - இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை இரண்டும் கொண்ட ஆறடா - வாழ்வு இரண்டும் கொண்ட ஆறடா இரண்டு கரையும் இல்லை என்றால் வறண்டு போகும் பாரடா - இதைத் தெரிந்து நெஞ்சம் தேறடா! வரவும் உண்டு செலவும் உண்டு வாழ்க்கை என்ற ஏட்டிலே - நம் வாழ்க்கை என்ற ஏட்டிலே பிறப்பும் இறப்பும் பிணைந்து தோன்றும் பெருமை யுண்டு நாட்டிலே - இதைப் பேசுமே குறள் பாட்டிலே! இரவும் பகலும் இரண்டும் ஒன்றாய் இணைந்த தேஒரு நாளடா - ஒன்றாய் இணைந்த தேஒரு நாளடா இரண்டும் உலகில் மாறிமாறி இயங்கும் உண்மை கேளடா - இதை எண்ணி மண்ணில் வாழடா!
மகனைப் பிரிந்த துயரம் தீரப் பாடியது. |