88 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
59 ஏழை ஏது? - எடுப்பு ஏழை ஏது செல்வர் ஏது - நாம் இந்த உலகில் பிறக்கும்போது -ஏழை தொடுப்பு நாளை மண்ணில் சாகும் போது நாம் வகுத்த பேதம் ஏது -ஏழை முடிப்பு இடையில் வந்த வேறு பாடே இனியும் நின்றால் வளரும் கேடே உடையும் உணவும் உடைமை யாவும் உலக மாந்தர் பொதுமை யாகும் -ஏழை உயர்வும் தாழ்வும் பிறப்பில் ஏது உலகில் அதனால் விளையும் தீது துயரம் நீங்க மனிதர் யாரும் தோழரானால் இன்பம் சேரும் -ஏழை |