60 அன்பாய் இரு! - எடுப்பு எத்தனைதரம் சொல்வேன் - மனமே எல்லாரிடமும் அன்பாய்இரு என்று -எத்தனை தொடுப்பு பித்தனைப் போல் கல்லாத பேயனைப்போல் - நீ பேசித்திரியாதே நேசித்திருப்பாயென்று -எத்தனை முடிப்பு வஞ்சனைகள் செய்யாதே வாழ்வினில் பொய்யாதே வாயில்வந்த படியெல்லாம் வாதுகள் செய்யாதே நஞ்சனைய தீமொழிகள் நவிலாதே பிறர்பொருளை நாடாதே நடுநிலைமை கோடாதே என்றுநான் -எத்தனை |