66 காலைக் கதிரவன் - எடுப்பு காலையில் தோன்றும் கதிரவனை - தாமரை கண்டு மலர்ந்தது பொய்கையிலே -காலை தொடுப்பு சோலைமலர்களை வண்டினம் நீவிடத் தூங்கிய மந்திகள் கிளைகளில் தாவிட -காலை முடிப்பு பள்ளிச் சிறார்கள் மனந்தெளி வடைந்து பயின்றிடும் ஒலியெழக் கன்றுபால் அருந்திடத் துள்ளித் திரிந்திட யாவரும் மகிழ்ந்திட துணையொடு தூங்குவார் மனம்மிக வருந்திட -காலை எழில்மிகு கோலம் வகைவகை வனைந்திட எங்கணும் மங்கல ஒலிகள் முழங்கிட விழிமலர் அலர்ந்திடப் புத்துணர் வோங்கிட வினைஞர்கள் உழவர்கள் தந்தொழில் செய்திட |