பக்கம் எண் :

காவியப் பாவை97

66
காலைக் கதிரவன்

-
எடுப்பு

காலையில் தோன்றும் கதிரவனை - தாமரை
கண்டு மலர்ந்தது பொய்கையிலே

-காலை

தொடுப்பு

சோலைமலர்களை வண்டினம் நீவிடத்
தூங்கிய மந்திகள் கிளைகளில் தாவிட

-காலை

முடிப்பு

பள்ளிச் சிறார்கள் மனந்தெளி வடைந்து
பயின்றிடும் ஒலியெழக் கன்றுபால் அருந்திடத்
துள்ளித் திரிந்திட யாவரும் மகிழ்ந்திட
துணையொடு தூங்குவார் மனம்மிக வருந்திட

-காலை

எழில்மிகு கோலம் வகைவகை வனைந்திட
எங்கணும் மங்கல ஒலிகள் முழங்கிட
விழிமலர் அலர்ந்திடப் புத்துணர் வோங்கிட
வினைஞர்கள் உழவர்கள் தந்தொழில் செய்திட