68 மாமியும் மருமகளும்! - எடுப்பு மருமகளைப் படுத்துகிற துன்பம் - சொந்த மாமிக்குத் தந்துவரும் தனியான இன்பம் -மருமக முடிப்பு சட்டியை ஏன்போட் டுடைத்தாய் - வீட்டைச் சரியாகக் கூட்டென்று சொன்னேன்மு றைத்தாய் கொட்டியா இங்கே கிடக்கு? - அப்பன் கொடுத்தானோ சீரெல்லாம்? வாயைய டக்கு கொண்டவனை வசமாக்கிக் கொண்டாய்! - நீதான் குடும்பம் நடத்துகிற பாங்கையே கண்டால் அண்டையிலே சிரிப்பார்கள் உன்னை - இவளை அடக்காமல் விட்டாயே என்பார்கள் என்னை நீவந்து கால் வைத்த நாளாச் - செல்வம் நீறாகிப் போச்சுதே வாழ்வெல்லாம் பாழாய்! நோய்வந்து வீழ்ந்தான் உன் ஆளன் - உன்னை நொடிப்போதில் உயிர்கொண்டு போகானோ காலன்! கொன்றாலும் ஆறாது நெஞ்சம் - என்னைக் கொஞ்சமும் மதிக்காமல் திரிகின்றாய் பஞ்சை என்றென்று பலவாறு பேசி - முகத்தில் இடிப்பாள் அடிப்பாள் மறைப்பாளே பூசி |