பக்கம் எண் :

100கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

செங்கரும்புச் சாறெல்லாம் சேர்ந்தோடிப் பக்கத்துப்
பொங்கிவரும் வாழைமரப் பாத்தி புகுவதனால்
காய்க்குங் குலையில் கரும்பினிமை தானேறும்;
வாய்க்குங் கமுகினங்கள் வானுயர்ந்த தென்னைஎன
எண்ணும் படிவளரும்; எவ்விடத்துஞ் சோலைவளம்,
உண்ணும் பழமரங்கள் ஊரெல்லாம் தோன்றுதலால்
காணும் இடமெல்லாம் கண்குளிரும் காட்சியதாய்த்
தோணும் மருதவளம் சூழ்ந்திருக்கும் இந்நாடு;

நெய்தல் வளம்

முப்பாலும் ஆழியுண்டு மூழ்கியதன் உட்சென்றால்
தப்பாமல் முத்துண்டு சார்ந்த பவழமுண்
டாறு சுவையுள் அரிய சுவையாகக்
கூறுமுயர் உப்புக் கொழிக்கும் அளமுண்டு;
நாடெல்லாம் சுற்றி நலங்கொழிக்கும் வாணிகத்தால்
ஏடெல்லாம் ஏத்த எழிற்கலங்கள் ஓட்டுதற்
கேற்ற துறைமுகங்கள் எத்துணையோ ஈங்குண்டு;
போற்றும் படியாய்ப் புவியிற் பெரும்பரப்பாய்
ஓதுங் கடற்கரைகள் ஒன்றிரண்டாம் அன்னவற்றுள்
ஈதும் ஒருகரையென் றெண்ணத் தலைநகரில்
சேருங்கரையுண்டு செந்தமிழர் நாகரிகம்
கூறுந் துறைமுகங்கள் கூடிக் கிடப்பதுண்டு;
நெய்தல் வளத்தால் நெடுநாளாச் செல்வமழை
பெய்யும் பெருநாடு பேணும் திருநாடு;

கனிப்பொருள் வளம்

தென்னாடு பொன்னாடாய்ச் செல்வ வளங்கொழிக்க
இந்நாடு நெய்வேலி என்னுமூர் பெற்றுளது


*கோவலர் - ஆயர்