104 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
*துப்பாக்கும் பொழுதத்துப் புகைகள் கூடிச் சுடர்மறைக்கும் மேகமென நாளுந் தோன்றும் அப்போது வருமுறவோர் அடடா! சொல்லில் அடங்குவதோ? ஆயிரமாம் அதற்கும் மேலாம்(3) எங்கிருந்தோ எவரெவரோ வருவார்; வந்திங் கென்னலமும் மனைநலமும் வினவி நிற்பார்; தங்கியிருந் தெதையெதையோ கதை யளப்பார்; தயங்காமல் உறவுரைப்பார்; ‘உங்கள் பாட்டன் தங்கைக்குக் கணவனுடன் பிறந்தான் மாமி தம்பிக்கும், என்பாட்டி தங்கை மாமன் பங்காளி மகளுக்கும் மணமு டித்த பனையூரார் எங்களவர்’ என்று சொல்வார்(4) இப்படியே உறவுரைத்து வந்து சூழும் என்சுற்றம் மாநாட்டுக் கூட்டம் ஒக்கும்; முப்பொழுதும் திருமணத்துக் காலம் போல மொய்த்திருந்து விருந்துண்பார் ஒலியே கேட்கும்; ஒப்புரவுப் பண்புணர்ந்தேன் உவந்து நிற்பேன்; உறவினர்க்கு **ஙப்போல நானி ருந்தேன்; இப்புவியில் இத்தனைப்பேர் உறவி ருக்க எனக்கென்ன குறையென்று நிமிர்ந்தி ருந்தேன்(5) வானத்து வெண்ணிலவாய் நானி ருப்பேன் வட்டமிடும் உறவினர்கள் விண்மீன் ஆவர்; கானத்துப் பழுமரத்தில் கனிகள் உண்ணக் கடுகிவரும் பறவையினம் போலச் சூழ்வர்;
*துப்பாக்கும் - சமைக்கும் **ஙப்போல் - ‘ஙப்போல் வளை’ என்னும் முதுமொழிக் கிணங்க. |