106 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
துள்ளிவிளை யாடுவதால் என்மேற் குற்றம் துணிந்துரையார்; பகைமாற்றி உறவை ஆக்கும் வெள்ளையப்பன் புரிகின்ற விளையாட் டெல்லாம் விரித்துரைப்பின் விந்தையினும் விந்தை யன்றோ!(9) உறவான ஒருவர்திரு மணத்துக் காக *ஒள்ளிழையை மக்களுடன் அழைத்துச் சென்றேன், மெருகோடு விளங்குமுயர் உந்து வண்டி விட்டிறங்கி நிற்பதன்முன் மணத்து வீட்டார் வருகவரு கென்றெனக்கு மாலை சூட்டி வரவேற்ற காட்சியினைக் கண்டோர் அங்கு வருகின்ற மணமகனோ என்ற யிர்த்து,** வாழ்வரசி அருகிருக்க ஐயம் விட்டார்(10) நான்பெற்ற செல்வத்தை எடுத்துக் கொஞ்சி நலமிக்க கன்னத்தைச் சிவக்க வைத்தார்; “தேன்பெற்ற சொற்பேசும் சித்தி ரங்கள் தெளிவாகத் தங்களையே வார்த்தெ டுத்தாற் போன்றிருக்கக் காண்கின்றோம்” என்று ரைத்தார்; புதல்வரெல்லாம் என்மனையாள் போன்றி ருந்தும் தேன்சொட்டப் புனைந்துரைத்த உறவின் மாந்தர் திருவிளையாட் டெடுத்துரைத்தல் இயல்வ தொன்றோ? (11) “தண்ணீரோ வெந்நீரோ குளிப்ப தற்கு? தமக்கென்று தனியறையும் ஒதுக்கி விட்டோம்; உண்பீரோ இவ்வுணவு? களைத்தி ருப்பீர்! ஓய்வுகொளத் துயிலுங்கள்” என்று ரைத்து
*ஒள்ளிழை - ஒளிபொருந்திய நகைகளை அணிந்த மனைவி **அயிர்த்து - ஐயங்கொண்டு |