பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 107

மண்மகளைக் காணாது விரித்து வைத்த
    மலர்மெத்தை தலையணைகள் காட்டி நின்று

பண்பாடி அருகிருந்து தாளம் போட்டுப்
    பல்வரிசை காட்டுகிற உறவு கண்டேன்(12)

விரைந்துவரும் பொழுதத்துச் சட்டைப் பொத்தான்
    விட்டுவந்தேன்; உறவினர்கள் அதனைக் கண்டு

மறைந்திருந்து பேசுகின்றார் “அடடா இந்த
    மனிதரிடம் எளிமையைத்தான் காண்பீர்! செல்வம்

நிறைந்தவர்கள் இப்படித்தான் இருத்தல் வேண்டும்;
    நிறைகுடங்கள் எப்போதும் தளும்பா அன்றோ?

குறைந்தவர்தாம் கூத்தடிப்பர்” என்று தம்முள்
    கூறுவது செவியில்விழ நகைத்துக் கொண்டேன்(13)

சின்னாளில் வணிகத்தில் நட்டங் கண்டேன்
    சேர்ந்தடித்த பெரும்புயலால் வயல்கள் கெட்டேன்

பொன்னகைகள் மாளிகைகள் ஒற்றி வைத்தேன்
    பொருள்முட்டுப் பாடடைந்து துயரால் நொந்தேன்;

எந்நாளும் என்வீட்டில் உண்டு வந்த
    எண்ணில்லா உறவினரைக் காண வில்லை;

பின்னோடித் தேடினுமே *அஞ்ச லென்று
    பேசுதற்கோர் ஆளில்லை தனித்து நின்றேன்(14)

பணநாதன் அருளில்லாக் கார ணத்தால்
    பறவைகளாய்ப் பறந்தோடி விட்டார்; மேலும்

கணமாக வந்தென்னை எறும்பு போலக்
    கடித்தார்கள்; கலப்புமணம் பழித்து ரைத்தார்;


*அஞ்சல் - அஞ்சாதே