பக்கம் எண் :

108கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

குணமில்லாத் தேனீயாய்க் கொட்டி னார்கள்;
    கூடிவருங் காலத்துக் கூடி வந்தார்

உணவோடு நலம்பெற்றார்; செல்வ மெல்லாம்
    ஓடிவிடுங் காலத்தில் ஓடி விட்டார்(15)

இப்பொழுதும் ஒருவர்திரு மணத்துக் காக
    என்குடும்பத் துடன்சென்றேன்; வரவு கூற

எப்பொழுதும் முன்னிற்போர் எவரும் இல்லை;
    என்துணைவி வெறுங்கழுத்தும் கையுங் கண்டார்;

சிப்பிதரு பொத்தான்கள் இல்லாச் சட்டை
    சிலைநிகர்க்கும் என்மக்கள் அனைத்துங் கண்டு

செப்புகின்றார் பஞ்சைஎன; ஒதுங்கி நின்றார்;
    சிரித்திருந்தேன் உறவினர்தம் செய்கை கண்டு(16)

படுப்பதற்கோர் படுக்கையிலை பாயும் இல்லை;
    பக்கத்து வீட்டிலொரு திண்ணை யோரம்

தடுப்பதற்கோ ஆளில்லை சாய்ந்து கொண்டேன்;
    தவமிருந்து பெற்றமக வொன்றை அங்கே

அடிப்பதைநான் கண்டெழுந்து தடுத்து நின்றேன்;
    “அப்பப்பா இப்பொழுதே திருடக் கற்றுக்

கொடுப்பதற்கோ அழைத்துவந்தாய்?” என்று சொல்லிக்
    குழந்தையின்கைக் கனியொன்றைப் பறித்துச் சென்றார் (17)

பொருளுடைய பொழுதிற்றான் வந்து சூழ்ந்து
    போற்றுகிற உறவுமுறை வளர்ந்து காணும்;

பொருளிலையேல் ஒருபொருட்டா மதியா தன்றிப்
    புன்மொழிகள் புகலுதற்கும் அஞ்சா தந்தோ!

பொருளுளதேல் சாப்பாட்டுக் கூட்டம்; கெட்டுப்
    போய்விடினோ கூப்பாட்டுக் கூட்டம் என்ற

பொருளுரையைக் காட்டுகிற உறவை நம்பிப்
    புவிதன்னில் வாழ்வதுதான் நன்றோ சொல்வீர்!(18)