பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 109

இப்புவியில் என்னுறவின் முறைதான் சொன்னேன்
    ஈண்டுள்ளோர் நல்லவர்கள் குறளிற் கூறும்

ஒப்புரவு தெரிந்தவர்கள்; திருக்கு றட்கே
    உயர்வுதரத் தேனப்பன் என்னும் நண்பன்

செப்பரிய முயற்சியினால் இங்குக் கண்ட
    திருக்குறளின் கழகத்தில் உறவு கொண்டோர்;

நற்குடும்ப நெறியறிந்து வாழும் சான்றோர்
    நலமனைத்தும் பெற்றிங்கு வாழ்க! வாழ்க!(19)

தலைப்பு:குறள் நெறிக் குடும்பம் - உறவினர்

இடம்:குறள்விழா - காரைக்குடி

நாள்:19-7-1959